0 0
Read Time:2 Minute, 15 Second

குத்தாலம் ஒன்றியம் கப்பூர் ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் ஒன்றியம் கப்பூர் ஊராட்சி வடக்கு வீதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூபாய் 11 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் 230 மீட்டர் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்குவதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு அடிக்கல் எடுத்துவைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் குத்தாலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மகேந்திரன், குத்தாலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், சரவணன், ஒன்றிய பொறியாளர் ராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வ முத்துகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மங்கை உமாசங்கர், குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மங்கை சங்கர், செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அப்துல்மாலிக், கப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், துணை தலைவர் மணிகண்டன் மற்றும் கப்பூர் ஊராட்சி கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான அடிக்கல் எடுத்து வைத்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %