0 0
Read Time:1 Minute, 30 Second

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த ஒலிம்பிக் வரலாற்றில் இரண்டு முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்புக்கு பி.வி.சிந்து உரியவரானார்.

வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டர் மூலம் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

நாட்டிற்காக மேலும் பல பதக்கங்களை பி.வி.சிந்து வெல்ல வாழ்த்துவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %