Read Time:1 Minute, 30 Second
புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர் திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி’ – குடியரசுத் தலைவர்
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழில், `இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கருணாநிதியின் படத்தை திறந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில் இன்று ஒரு முக்கியமான நாள்’ என்றார். மேலும் பாரதியின் வரிகளை குறிப்பிட்டு பேசினார்.
“மந்திரம் கற்போம்வினைத் தந்திரம், கற்போம்வானையளப்போம் கடல்மீனையளப்போம், சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்சந்தி, தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்” என்று குறிப்பிட்டு பேசினார் குடியரசுத் தலைவர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய குடியரசுத் தலைவர், “புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர் திருத்தங்களுக்கு வித்திட்டவர். இலக்கியம், சினிமா என பல துறைக்கு பங்காற்றியவர்” எனக் குறிப்பிட்டார்.