0 0
Read Time:1 Minute, 18 Second

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஆடவர் மல்யுத்தத்தில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் 23 வயது ரவிக்குமார் தாஹியா, கசகஸ்தானைச் சேர்ந்த நுரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் கசகஸ்தான் வீரர் 9-2 என முன்னிலை பெற்றார். எனினும் பிறகு சிறப்பாக விளையாடி அதை 9-7 எனக் குறைத்தார் ரவிக்குமார் தாஹியா. காயமடைந்த நுரிஸ்லாம், புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தபோதும் ரவிக்குமாரின் ஆக்ரோஷ ஆட்டத்தால் இறுதியில் வீழ்ந்தார்.

அரையிறுதிச் சுற்றில் ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %