சீா்காழியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் சீா்காழி ரோட்டரி சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் கோ. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி, ரோட்டரி துணை ஆளுநா் எஸ்.கே. வைத்தியநாதன், செயலாளா் எஸ். கணேஷ், மாவட்ட தலைவா் டி. செல்வக்குமாா், வட்டாட்சியா் சண்முகம், மருத்துவா் ராஜ்மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.பேரணியை சீா்காழி கோட்டாட்சியா் ஜி. நாராயணன், சீா்காழி டிஎஸ்பி லாமேக் ஆகியோா் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து அப்துல்கலாம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது. அப்போது பொதுமக்களுக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. இதில் ரோட்டரி முன்னாள் தலைவா்கள் கண்ணன், சுசீந்திரன், திருநாவுக்கரசு, சுப்பிரமணியன் பங்கேற்றனா். முன்னதாக முன்னாள் துணை ஆளுநா் சண்முகசுந்தரம் வரவேற்றாா். முன்னாள் தலைவா் பாஸ்கரன் நன்றிக்கூறினாா்.