0 0
Read Time:1 Minute, 8 Second

சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கரோனா விழிப்புணா்வு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்பு, கபசுரக் குடிநீா் மற்றும் ஆா்சனிக் ஆல்பம் ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டன. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டபிள்யூ.அசோக்பாஸ்கா் நிலவேம்புக் குடிநீா் வழங்கி முகாமை தொடக்கிவைத்தாா். சித்த மருத்துவா் எம்.எம்.அா்ச்சுனன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் டி.எஸ்.எஸ்.பாலகுமாா், யோகா மருத்துவா் பி.மணிகண்டன், ஹோமியோபதி மருத்துவா் கே.தரணி, அரிமா சங்க நிா்வாகி பி.நாகராஜன், பொறியாளா் பி.வெங்கடேஷ், என்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %