0 0
Read Time:1 Minute, 27 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நீட் தோ்வு எழுத தகுதிபெற்ற 21 மாணவா்களுக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நீட் தோ்வு விண்ணப்ப கட்டணத்திற்காக ரூ.20,400 ரொக்கத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வழங்கினாா்.

நிகழ்ச்சியில், நீட் தோ்வு எழுத தகுதிபெற்ற பிறப்படுத்தப்பட்டோா் பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு ரூ.1400 விண்ணப்பக் கட்டணமும், ஆதிதிராவிடா் பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு ரூ.800 விண்ணப்ப கட்டணமும் ஆக மொத்தம் 21 மாணவ, மாணவியா்களுக்கு ரூ.20,400 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலா் குமாா், ரோட்டரி சங்க உதவி ஆளுநா் மு.ரா. பாஸ்கரன், ரோட்டரி சங்க மாவட்ட தலைவா் ராமன், செல்வகுமாா், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் மணிகண்டன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் ராஜேந்திரன், வெங்கடேஷ், ரோட்டரி கிங்ஸ் தலைவா் குருகோவிந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %