0 0
Read Time:1 Minute, 55 Second

அதிமுகவின் அவைத் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன்(81), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு தினங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், நேற்று மாலை மதுசூதனன் (81) காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் முன்பு வைத்திருந்த மதுசூதனன் உருவப்படத்திற்கு அதிமுகவினர்‌ மாலை அணிவித்து, மலர்தூவி 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதைப்போல மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கழக நிர்வாகிகள் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

செம்பனார்கோவிலில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெனார்த்தம், கீழையூர் கூட்டுறவு சங்க தலைவர் கபாடி பாண்டியன், ஒன்றிய விவசாய அணி துணைச்செயலாளர் தனஞ்செயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரேம்குமார், ரஞ்சித், ஒன்றிய குழு உறுப்பினர் மைதிலி மகேந்திரன், பரமசிவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %