0 0
Read Time:1 Minute, 18 Second

மயிலாடுதுறை, ஆகஸ்டு- 09;
மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்க கூடிய மாணவி கடந்த மாதம் 31-ஆம் தேதி வீட்டிலிருந்து மாணவி காணாமல் போனதைக் கண்டு அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரினை அளித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்த நிலையில் வைதீஸ்வரன் கோயில் புங்கனூரை சேர்ந்த முனுசாமி மகன் அன்பரசன் என்பவன் மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் அன்பரசனை கைது செய்து அவன் மீது கடத்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிந்து சிறையில் அடைத்தனர். மேலும் அவனிடமிருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %