0 0
Read Time:3 Minute, 0 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை தோறும் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம் அதை போல் இன்று நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் விற்பனை கூட அலுவலக பொருப்பாளர் சிலம்பரசன் முன்னிலையில் நடை பெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ 8,603க்கும் சராசரி 77.50க்கும் குறைந்த பட்ச விலை 74.00க்கும் விலை போனதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த கொரோனா நோய்த் தொற்று கால கட்டத்தில் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திட வழிவகை செய்திட்ட தமிழக அரசுக்கும் , தமிழக முதல்வருக்கும், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துறை செயலர், ஆணையர் மற்றும் அதிகாரிகள், வியபாரிகள் அனைவருக்கும் விவசாயிகள் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் எதிர் வரும் காலங்களில் தங்களது அனைத்து விதமான விலை பொருட்களையும் விற்பனை கூடத்திற்கு எடுத்து வந்து இதை போல் நல்ல விலை பெற்றிட ஏதுவாக கூடுதல் கிடங்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டி தமிழக முதல்வருக்கும், வேளாண் துறை, வேளாண்மைத் துறை அமைச்சருக்கும் வேண்டுகோள் வைத்தனர்.

இந்த ஏலத்தில் ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, குஜராத் போன்ற உள்ளிட்ட மாநில வியபாரிகளும், கடலூர், விழுப்புரம், தேனி, சத்திய மங்களம், நாகை, கும்பகோணம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 16 வியபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் விலை பொருளான பருத்திக்கு நல்ல விலைக்கு எடுத்தனர்.

செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செய்தியாளர்களிடம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் கூறியதாவது விவசாயிகள் இதை போல் தங்களது விளை பொருட்களான பச்ச பயறு, உளுந்து, எள், நிலகடலை, தேங்காய், முந்திரி போன்ற விளை பொருட்களை எடுத்து வந்து பயன் அடைய வேண்டும் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %