0 0
Read Time:1 Minute, 0 Second

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மனைவி இறந்த செய்தி கேட்டு கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பட்டூர் கிராமத்தை சேர்ந்த 73 வயதான இராமலிங்கத்திற்கு 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். நான்கு பேருக்கும் திருமணமான நிலையில் இராமலிங்கம் மனைவி சரோஜாவுடன் மகன்கள் வீட்டில் வசித்து வந்தார். 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரோஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரோஜா இறந்த செய்தியை மகன்கள் இராமலிங்கத்திடம் கூறிய நிலையில், அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் படுக்கையிலேயே உயிரிழந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %