0 0
Read Time:1 Minute, 15 Second

கூட்டத்தை தவிர்ப்பது, முகக்கவசம் அணிவது போன்ற தடுப்பு நடைமுறையை பின்பற்ற வேண்டும் என கூவி… கூவி சொன்னால் கூட, அதனை மக்கள் அலட்சியப்படுத்துவதால், சென்னை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரிப்பதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்த அவர், தமிழகத்தில் 34 மாவட்டங்களில் 100 க்கு கீழும்,4 மாவட்டங்களில் 100 க்கு மேலும் தொற்று பதிவாகிறது என்றார். சென்னை கீழ்ப்பாக்கத்தில், ஆடி மாத கூழ்வார்க்கும் நிகழ்வில் 300 பேர் கூடி அதில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்ற அவர், பண்டிகை, விழாக்காலத்தில் கூட்டம் சேராமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %