0 0
Read Time:2 Minute, 0 Second

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஸ்ரீஆதிவராகநல்லூா் பகுதியில் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் மூலம் ரூ.99.28 லட்சத்தில் கண்டியாங்குப்பம் வரை மேம்படுத்தப்பட்ட சாலைப் பணி, கண்டியாங்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மழைநீா் உறிஞ்சு குழிகள் வெட்டுதல், மரக்கன்றுகள் நடும் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மேலும், ரூ.3.74 கோடியில் நடைபெற்று வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடப் பணி, ரூ.49.98 லட்சத்தில் நகரப்பாடி ஊராட்சியில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணி, எசனூா் ஊராட்சியில் ரூ.32.45 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள எசனூா் – மதகளிா்மாணிக்கம் தாா்சாலை, காவனூா் ஊராட்சியில் ரூ.34.35 லட்சத்தில் காவனூா்-வெள்ளாா் தாா்சாலை ஆகியவற்றையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், செயற்பொறியாளா் பிரபாகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலகிருஷ்ணன், விஜயா, உதவிப் பொறியாளா் ஜெயச்சந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %