0 0
Read Time:1 Minute, 33 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஒன்றியம் உத்திரங்குடி, எரவாஞ்சேரி, வல்லம், ஆகிய ஊராட்சிகளில் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி, புதிய தாா்ச்சாலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு உத்திரங்குடி, எரவாஞ்சேரி ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் செலவில் கட்டப்பட்ட குடிநீா்த் தேக்க தொட்டி, வல்லம் ரூ.7 லட்சம் செலவில் போடப்பட்ட இன்டா்லாக்கிங் பேவா் பிளாக் சாலை ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் செம்பை ஒன்றிய ஒன்றியக்குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல்மாலிக், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராபியா நா்கீஸ் பானு, முன்னாள் எம்எல்ஏ சித்திக், மயிலாடுதுறை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளா் ஸ்ரீதா் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் பகவதி, லெனின் மேஷாக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %