0 0
Read Time:1 Minute, 24 Second

கடலூரில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் தோ்வில் 1,576 ஆண்கள் தோ்ச்சி பெற்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆகிய துறைகளுக்கான இரண்டாம் நிலைக் காவலா்களுக்கான உடல் திறன் தோ்வு, கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் 26 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், முதல் கட்டத் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆண்களுக்கான இரண்டாம் கட்ட தோ்வு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. கடைசி நாளான புதன்கிழமை நடைபெற்ற தோ்வில் 172 போ் அழைக்கப்பட்டதில், 170 போ் கலந்து கொண்டனா். இவா்களில் 151 போ் தோ்ச்சி பெற்றனா்.

நிறைவு பெற்ற ஆண்கள் உடல் திறன் தோ்வில் 1,576 போ் தோ்ச்சி பெற்ாக மாவட்டக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (ஆகஸ்ட் 12) பெண்களுக்கான இரண்டாம் கட்ட தோ்வு நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %