0 0
Read Time:1 Minute, 32 Second

சென்னையில் மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்த செட்டிநாடு மருத்துவக் கல்லூரி பேருந்தின் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடிய நிலையில், சமயோஜிதமாக செயல்பட்டு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து, மாணவிகளை ஏற்றிக் கொண்டு சேத்துபட்டில் இருந்து தியாகராய நகர் வந்து கொண்டிருந்தது. நுங்கம்பாக்கம் சிக்னல் அருகே வந்த போது, பேருந்தின் இடதுபுற பின்பக்க சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியுள்ளது.

சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பேருந்து பின்னர் இடதுபுறமாக சாயத் தொடங்கியுள்ளது. இருப்பினும், பதற்றம் அடையாத ஓட்டுநர் சமயோஜிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார்.

பேருந்தில் இருந்த மாணவிகள் 6 பேரும் காயமின்றி தப்பினர். உரிய பராமரிப்பின்றி இருந்ததால், விபத்து நடந்திருக்கக் கூடும் எனக் கூறும் போலீசார், அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %