0 0
Read Time:2 Minute, 1 Second

அவதூறு வழக்குகளில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் குறித்தும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

அந்த கருத்துகள், தங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகிய இருவரது சார்பிலும், தமிழக அரசு தரப்பில் இரண்டு அவதூறு வழக்குகள் கடந்த மார்ச் மாதம் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஸ்டாலின் ஆஜராகவில்லை என தெரிகிறது.

இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், இந்த வழக்குகள் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டாலினுக்குப் பிறப்பிக்கப்பட்ட சம்மன் வழங்கப்படவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வருகிற 16ஆம் தேதி ஆஜராகும்படி ஸ்டாலினுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %