0 0
Read Time:1 Minute, 26 Second

மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் இயங்கி வருகிறது அரசு உடதவிபெறும் பள்ளி. இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஞானஸ்கந்தன். இவர் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.ஆரம்பத்தில் இதை யாரிடம் சொல்லாமல் இருந்தனர் மாணவிகள்.

ஞானஸ்கந்தனின் தொல்லை அதிகமாகிவிடவே, பெற்றோர்களிடம் சொல்லி அழுதனர். இதைக்கேட்டு ஆவேசம் கொண்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசிடம், ஞானஸ்கந்தனை கைது செய்தால்தான் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதன்பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட கல்வி இயக்குநரிடம் புகார் அளித்தனர் பெற்றோர்கள்.

2019ல் அளிக்கப்பட்ட இந்த புகாரின் பேரில் ஞானஸ்கந்தன் மீது விசாரணை நடைபெற்று வந்தது. பல மாணவிகளிடம் அவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் உறுதியானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %