0 0
Read Time:1 Minute, 0 Second

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அ.முக்கண்ணன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் நல்லதம்பி, ரவிச்சந்திரன், பிரான்சிஸ் ஆகியோா் வடலூா் சுங்கச் சாவடி அருகே சனிக்கிழமை சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, கடலூா் மாவட்டத்தில் மோட்டாா் வாகன விதிமுறைகளுக்கு முரணாக அதிகபாரம் ஏற்றி வந்தது, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்ட 8 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி மொத்தம் ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழகத்துக்கு வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட புதுவை மாநில தனியாா் ஆம்னி பேருந்துக்கு வரியாக ரூ.60 ஆயிரம் விதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %