0 0
Read Time:2 Minute, 42 Second

’’மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகம் புதர்மண்டி உள்ள நிலையில் இன்று 6 அடி நீளமுள்ள பாம்பை ஒரு மணி நேரம் போராடி  தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்’’

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடம் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ள நிலையில் கட்டடத்தை சுற்றி பொதுமக்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக மரங்களுடன் கூடிய பூங்கா இருந்தது. தற்போது இது பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது.

இதனால், கொடிய விஷம் உள்ள பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் தாங்கள் உயிர் அச்சத்துடன் வருவதாகவும், கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் நேரத்தில் ஏதேனும் விஷ ஜந்துக்களால் கடிப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பீதியுடன் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து கண்டுகொள்ளாத கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை பராமரிக்காமல் அலட்சியப் போக்கில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அலுவலகத்தின் வாசல் முன்புறமுள்ள பகுதியில் 6 அடி நீளமுள்ள மிகப்பெரிய பாம்பு ஒன்று மரத்தில் ஏறிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஊழியர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி மரத்தின் மேலாக இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து அந்த பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்து பாதுகாப்பான வனப்பகுதியில் கொண்டு விட அனுப்பி வைத்தனர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %