0 0
Read Time:1 Minute, 39 Second

குத்தாலம் அருகே எலி மருந்தை தின்ற பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குத்தாலம் அருகே வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கேசவன். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் இறந்து விட்டார். அவரது துக்கநிலையில் இருந்து மீள முடியாமல் அவரது குடும்பத்தினர் இருந்து வந்தனர். இந்தநிலையில் அவரது மகள் பிரியா (வயது 35). கடந்த 9-ந் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று விட்டார். 

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 15-ந் தேதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பிரியாவின் தாய் மீனாம்பாள் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %