0 0
Read Time:1 Minute, 57 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செம்பனார்கவில் விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய பொறுப்பாளர் யோ.ஸ்டாலின் தலைமை வகித்தார், விசிக மாநில தேர்தல் பணிக்குழு நிர்வாகி ஆக்கூர் செல்வ அரசு, மயிலாடுதுறை நாடாளுமன்ற விசிக செயலாளர் கதிர்வளவன் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணைத் செயலாளர் ரியாஸ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே .எஸ். பாலா வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில்,
செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அப்துல் மாலிக், திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி. எம். ஸ்ரீதர், விசிக ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருவழுதி, கனிவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கை நவீத் நன்றி கூறினார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %