0 0
Read Time:1 Minute, 45 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் ஊராட்சி வள்ளுவர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி நாகை வள்ளுவர்குல சங்கம் மயிலாடுதுறை சார்பில் வள்ளுவர்குல அந்தணர்கள் முப்பிரி நூல் அணியும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதலில் கணபதி பூஜை, சௌபாக்கிய யாக பூஜை நடைபெற்று பின்னர் வள்ளுவர்குல அந்தணர்கள் முப்பிரி பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூஜை செய்து பூணூல் அணிந்தனர். அவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர் வள்ளுவர்குல ஜோதிடர்கள் சங்க வேதகுரு பண்டிட் ஸ்ரீதர் வேத மந்திரங்கள் ஓதி அந்தணர்களுக்கு பூணூல் அணிவிக்க செய்தார்.

மேலும் விழா பரசலூர் ஒன்றிய குழு உறுப்பினர் கே.எஸ்.கிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை வள்ளுவர்குல சங்க தலைவர் மாங்குடி பிரபாகரன் செயலாளர் அருள்நிதி கண்ணன் பொருளாளர் செம்மங்குடி ஜோதிசிவா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நாகை வள்ளுவர்குல சங்கம் மயிலாடுதுறை அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %