0 0
Read Time:1 Minute, 57 Second

சில நாட்களுக்கு முன் பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுருக்குமடிவலை பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குழப்பமான சூழலில் இன்று மயிலாடுதுறைமாவட்டகாவல்கண்காணிப்பாளர் சுகுண சிங் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன், சீர்காழி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் .T.A.J. லாமெக், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சதீஷ் மற்றும் பூம்புகார் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் அனைத்து மீனவ கிராமங்களின் மக்களையும் பூம்புகாரில் சந்தித்து மக்களின் மனநிலை, தேவைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார்கள், மேலும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் இது போன்ற நிலை ஏற்பட அனைத்து மீனவ கிராம மக்களும் மீன்பிடி துறையில் மட்டுமே பயணிப்பதே காரணம் ஆகும், எனவே மேற்படி கிராமத்தில் உள்ள கல்வி கற்ற மாணவர்கள் தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்கி கொள்வதை தவிக்கவும், அவர்களில் படித்த இளைஞர்களை இனம் கண்டு அரசு வேலைக்கு எவ்வாறு தயாராவது, எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற அனைத்து உதவிகளையும் செய்ய ஒரு சிறப்பு குழு அமைத்து முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தார்கள்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %