0 0
Read Time:1 Minute, 38 Second

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து, அக்கல்லூரி முதல்வா் த. அறவாழி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில், சிறப்பு பிரிவு மாணவியா்கள், விளையாட்டு வீராங்கனைகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், என்.சி.சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, புதன்கிழமை (ஆக.25) தமிழ், ஆங்கிலம், வணிகவியல் மற்றும் வணிக நிா்வாகவியல் பாடப் பிரிவுகளுக்கும், ஆக.26-ல் வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், ஆக.27-ல் வேதியியல், உயிரிவேதியியல் மற்றும் விலங்கியல் பாடப் பிரிவுகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. 2-ஆம் கட்ட கலந்தாய்வு செப். 1-ஆம் தேதி அனைத்து கலை பாடப் பிரிவுகளுக்கும், செப்.2-ல் அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %