உலக தரவரிசை பட்டியலில் 12 வது இடத்தில் இருக்கும் பவினா பென், அவரைவிட முன்னிலையில், 9 வது இடத்தில் இருக்கும் மேகனை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
டோக்கியோ பாரலிம்பிக் தொடரின் இரண்டாம் நாளான இன்று, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் பவினாபென் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், டேபிள் டென்னிஸில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கிரேட் பிரிட்டன் வீராங்கனை மேகனை எதிர்த்து போட்டியிட்ட அவர், 1-3 என்ற கேம் கணக்கில் போட்டியை வென்று அசத்தினார். உலக தரவரிசை பட்டியலில் 12 வது இடத்தில் இருக்கும் பவினா பென், அவரைவிட முன்னிலையில், 9 வது இடத்தில் இருக்கும் மேகனை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர்.