0 0
Read Time:1 Minute, 5 Second

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவில்லை எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அன்பழகன், விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்வதாகக் குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காழ்ப்புணர்ச்சி இருந்தால் அம்மா உணவகம் தற்போது செயல்பட்டிருக்காது என்றும், காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளும் எந்த எண்ணமும் திமுக ஆட்சிக்குக் கிடையாது என்றும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %