0 0
Read Time:1 Minute, 46 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம், கீழ்மாத்தூர் ஊராட்சி, ஒட்டங்காடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஒன்டி வீர சுவாமி, ஸ்ரீ முனிஸ்வர சுவாமி திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டு சிறப்பாக மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகத்தின் முன்னதாக இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மஹா பூர்ணாஹுதி மற்றும் கடம் புறப்பட்டு கோபுர கலசத்தை அடைந்து புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், கும்பாபிஷேகம் செய்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. மேலும் சுவாமிகளுக்கு மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

மகா கும்பாபிஷேகத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஒட்டன்காடுஅ ருள்மிகு ஸ்ரீ ஒன்டி வீர சுவாமி, ஸ்ரீ முனீஸ்வர சுவாமி கோவில் விழாக் குழுவினர் R.மகேஸ்வரன், A.கண்ணன், R.செந்தில்குமார், ஜெகதீசன், ஜெயங்குமார் மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %