0 0
Read Time:12 Minute, 23 Second

உணவே மருந்து:ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவு வகைகள் மற்றும் பழங்கள் என்ன..?என்ன…?

பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின் வகையைச் சேர்ந்த ஃபோலிக் ஆசிட் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில், ஃபோலிக் ஆசிட் குறைபாடு காரணமாக இரத்த அணுக்கள் குறைகின்றன. வாழைப்பழம், தக்காளி, முளைப்பயிறு, பீட்ரூட் போன்றவற்றில் ஃபோலிக் ஆசிட் இடம் பெற்றிருக்கும்.

வைட்டமின் பி, சி சத்து அதிகம் உள்ள குப்பைமேனி இலையின் தேநீர் பருக வேண்டும். சுடு தண்ணீரில், இரண்டு ஸ்பூன் அளவிலான குப்பைமேனி இலைகளை சேர்த்து குடிக்க வேண்டும். தினம், இரண்டு முறை குடித்து வந்தால், இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

உடலில், இரும்புச் சத்து குறைபாடினால், ஹீமோக்ளோபின் அளவு குறைவாக இருக்கும். கீரை வகைகள், பூசணி, பீட்ரூட், சிக்கன் கல்லீரல், பேர்ச்சம்பழம் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

உடலுக்கு தேவையன ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஆப்பிள், உடல் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றது. தினம், ஒரு ஆப்பிள் அல்லது ஆப்பிள் ஜூஸ் குடிப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

1-2 பீட்ரூட்களை அதன் தோலுடன் மைக்ரோ ஓவனில் அல்லது அடுப்பில் போட்டு சமைக்கவும். அதனை ஆற வைத்து பின் தோலை உரிக்கவும் மீடியம் அளவிலான 1 பீட்ரூட், 3 காரட்கள் மற்றும் 1/2 சீனிக் கிழங்கை கொண்டு ஆரோக்கியமான ஜூஸை தயார் செய்யலாம். தினமும் அதனை ஒரு முறை குடிக்கவும்.

இரத்த சோகையை எதிர்த்து போராடவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாட்டு சிகிச்சையான சர்க்கரைப்பாகுவை பயன்படுத்தலாம். சர்க்கரைப்பாகுவில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் பல்வேறு பி வைட்டமின்கள் அடங்கியுள்ளது. இது சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். 2 டீஸ்பூன் சர்க்கரைப்பாகுவை 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர் நாற்றும் 1 கப் தண்ணீருடன் கலந்திடுங்கள். இதனை தினமும் ஒரு முறை குடியுங்கள்.

தினமும் சில உடற்பயிற்சிகளை செய்திடுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உடல் முழுவதும் தேவையான ஆக்சிஜனை அதிகரிக்க உங்கள் உடல் அதிகமான அளவில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யும். ஆகவே மிதமான அளவு முதல் கடினமான அளவு வரையிலான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

உங்கள் உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உடல் சோர்வைப் போக்கும் இரும்புச் சத்துக்களை சேர்த்துக்கொள்ளவும், ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா சில முக்கிய பொருட்களை பரிந்துரை செய்துள்ளார். அவைகளில் பீட்ரூட், பேரீட்சை பழங்கள், முளை கட்டிய பயிறுகள், கடலை பருப்பு மற்றும் மாதுளை போன்றவையாகும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் இரும்புச் சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பி காணப்படுகின்றன. இவை ரத்த சிவப்பு அணுக்களை சரிசெய்யவும், அவற்றை மீண்டும் செயல்படுத்தவும் உதவுகின்றன. இதனால் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்கும். கேரட், ஆரஞ்சு மற்றும் நெல்லிக்கனி சாறுகளை விட முதலிடத்தில் பீட்ரூட் சாறு உள்ளது.

“ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் சிறந்த ஒன்றாகும். இவற்றில் இரும்புச் சத்து மட்டும் அதிகம் காணப்படாமல், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துடன் ஃபோலிக் அமிலமும் அதிகம் காணப்படுகிறது. ஆரோக்கியமான இரத்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த ஒவ்வொரு நாளும் பீட்ரூட் சாறு குடிக்க வேண்டும்” என்று பாத்ரா குறிப்பிட்டுள்ளார்.

பீட்ரூட் மற்றும் மாதுளை ஆகியவற்றை சேர்த்து சாறாக அடித்து, தினமும் காலை ஒர்க்அவுட்க்கு பிறகு பருகி வரலாம். “இது இரும்புச்சத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை பளபளக்க செய்யும்” என்று ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா கூறியுள்ளார்.

கடலை பருப்பு

கடலை பருப்பு வகைகளில் குறிப்பிடத்தக்க அளவு புரதம், ஃபைபர், கார்போஹைட்ரேட்டுகள், ஃபோலேட் மற்றும் மாங்கனீசு சத்துக்கள் உள்ளன. உடலில் அத்தியாவசிய இரும்புச்சத்துக்கு ஒரு கப் கடலை பருப்பு பரிந்துரைக்கப்படுகிறது. “பீட்ஸின் ஒரு பக்க சாலட் மூலம் தினமும் விருப்பப்படி மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு நீங்கள் கடலை பருப்பு சாப்பிடலாம்” என்று பத்ரா குறிப்பிட்டுள்ளார்.

மாதுளை

வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக, மாதுளையில் அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. இது இரத்த எண்ணிக்கையை சீராக்க உதவுகிறது. மேலும் ஒருவரின் அன்றாட உணவில் இவற்றை சேர்க்கும்போது ஹீமோகுளோபின் அளவு உயரும்.

முளை கட்டிய பயிறுகள்

ஃபோலிக் அமிலக் குறைபாடு, குறைந்த ஹீமோகுளோபின் அளவிற்கு வழிவகுக்கும் என்று அறியப்படுகிறது. பச்சை இலை காய்கறிகள், முளை கட்டிய பயிறுகள், உலர்ந்த பீன்ஸ், வேர்க்கடலை, வாழைப்பழங்கள், ப்ரோக்கோலி ஆகியவற்றை உட்கொள்வது மூலம் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

பேரீட்சை பழங்கள்
பேரீட்சையில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதாக அறியப்படுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் அதிக சர்க்கரை அளவைக் கொண்டிருப்பதை அறிந்திருப்பதால் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

உலர்ந்த திராட்சை

பொதுவாக, கருப்பு திராட்சை, பச்சை திராட்சை என இரண்டு வகைகள் உள்ளன. கருப்பு திராட்சையில் ஆந்தோசயனின் (Anthocyanin), பச்சை திராட்சையில் கேட்டச்சின் (Catechin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் (Antioxidants) உள்ளன. ரெஸ்வெரட்ரால் (Resveratrol) என்னும் வேதியல் பொருள் திராட்சையின் விதையிலும், தோலிலும் நிறைந்துள்ளது. இது, இதயம் சம்பந்தமான நோய்கள், பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி வராமல் தடுக்க உதவும். ஆக்சிஜன் ரேடிக்கலை உறிஞ்சும் திறன் இதில் மூன்று மடங்கு அதிகம். 100 கிராம் உலர்ந்த திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டாலே இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து கிடைத்துவிடும்.

மாதுளைப் பழம்

குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று, மாதுளை. நார்ச்சத்து நிறைந்தது. 100 கிராம் பழத்தில், 0.30 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. ஆக்சிஜன் ரேடிக்கலை உறிஞ்சும் திறன் இதில் அதிகம். மாதுளம்பழச் சாற்றில் தேன் கலந்து தினமும் காலை உணவுக்குப் பின்னர் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். மாதுளையைத் தொடர்ந்து சாப்பிட்டால், மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம். தோல் சுருக்கத்துக்குக் காரணமான செல்களின் டிஎன்ஏ-க்களை மாற்றி, புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் இது உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், பாலியல் தொடர்பான நோய்களுக்கு இது அருமருந்து.

தர்பூசணி

தர்பூசணி புத்துணர்ச்சி, தரும் பழம் மட்டுமல்ல… வெயில் காலத்துக்கு ஏற்றதும்; உடல்நலத்துக்குச் சிறந்ததும் கூட. இது, உடலில் உள்ள வெப்பத்தையும் ரத்தஅழுத்தத்தையும் சரிசெய்யும். வைட்டமின் ஏ, தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவிகிதம் தண்ணீர், 7 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 0.24 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளன. இதில் உள்ள லைகோபீன் என்ற சத்து சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக் கதிர் வீச்சில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

அத்திப்பழம்

ஜீரண சக்திக்கு உதவுவது அத்திப்பழம். நமக்குப் புத்துணர்ச்சியை தந்து நுரையீரலிலுள்ள அடைப்புகளை நீக்கும். தோல் தொடர்பான பிரச்னைகள் நீங்கும். இதில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. 100 கிராம் அத்திப்பழத்தில் இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். இதில் உள்ள க்ளோரோஜெனிக் (chlorogenic) அமிலம் உடலில் உள்ள இன்சுலினை அதிகரிக்கச் செய்து, சர்க்கரையைக் குறைக்கும். நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், மலச்சிக்கல் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். ரத்தப்போக்கைக் கட்டுபடுத்தும் வல்லமைகொண்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %