0 0
Read Time:1 Minute, 37 Second

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை!. ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத நிலையில் 3-வது முறையாக இன்று தேர்வு எழுத இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை !.

மேட்டூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ் (19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ் ஏற்கனவே மருத்துவர் கனவில் 2 முறை நீட் தேர்வு எழுதி உள்ளார். ஆனால் இரண்டு தேர்விலும் தேர்ச்சியாகாத நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டார். மூன்றாவதாக இன்று தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக அவர் தீவிரமாக தயாராகி வந்தார்.

ஆனால் எங்கே மீண்டும் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சம் காரணமாக தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக நீட் தேர்வு காரணமாக தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அனிதா தற்கொலை தொடங்கி வரிசையாக ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் அதிக அளவில் பலியாகி வருகிறார்கள்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %