0 0
Read Time:2 Minute, 27 Second

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் பெருநகராட்சியை மாநகராட்சியாகவும், வடலூர் மற்றும் திட்டக்குடி பேரூராட்சியை நகராட்சியாகவும் தரம் உயர்த்துவது குறித்து முதல் கருத்து கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது கடலூர் பெருநகராட்சியை மாநகராட்சியாகவும், வடலூர் மற்றும் திட்டக்குடி பேரூராட்சியை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்படும்போது மக்களுடைய பொருளாதார நிலை மற்றும் வாழ்க்கைத்தரம் உயரும், எனவே அனைத்து தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசித்து கருத்துக்களை இரண்டாம்கட்ட கூட்டத்தில் தெரிவிக்கலாம் எனவும், மேற்படி தங்களது கருத்துக்களை எழுத்துபூர்வமாக தெரிவிக்கும்படியும் அவ்வாறு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கிராம ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துதல் தற்போது பதவி வகிக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எவ்வித இடையூறும் தங்களது பதவி காலத்தில் (5 ஆண்டுகள்) ஏற்படாது என்பதை உறுதிபட தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) /திட்ட இயக்குநர் பவன்குமார்ஜி.கிரியப்பனவர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)மல்லிகா, துணை இயக்குநர்கள் (ஊராட்சிகள்) கண்ணன், பிரபாகரன்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வல தொண்டுநிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %