0 0
Read Time:1 Minute, 21 Second

கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தில் அறிஞர் அண்ணா 113 வது பிறந்த நாள் விழா அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கீரப்பாளையம் பேருந்து நிறுத்த சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை ஏற்றார் . நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா திருவூருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் கொண்டாட்ட நிகழ்வில் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் சாந்தி ஆசைத்தம்பி,கூட்டுறவு சங்க தலைவர்கள் கோதண்டபாணி,கருணாகரன் கூட்டுறவு சங்க இயக்குநர் சிவலிங்கம் ஜெயராஜ், மணி, கூட்டுறவு சங்க துணைத்தலைவர் அண்ணாதுரை, பாபு, தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் பிரவின் , தனபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %