0 0
Read Time:1 Minute, 56 Second

மயிலாடுதுறையில் உலக ஓசோன் தின விழா மயிலாடுதுறையில் தேசிய பசுமைப் படையின் சார்பில் உலக ஓசோன் தின விழா மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது இவ்விழாவில் ஓசோன் தின விழிப்புணர்வு குறித்த பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் இரா லலிதா தேசிய பசுமை படையின் பள்ளி ஒருங்கிணைப்பாளர் களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கினார்.

நிகழ்வில் ரோட்டரி சங்கத்தின் பொருளாளர் வேல்சந்த் கலந்து கொண்டார் பசுமை படை யின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.செல்வகுமார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மணிவண்ணன் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் பிரபு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுகுமார் தேசிய மேல்நிலைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் புனித சின்னப்பர் மேல்நிலைப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் லலிதா தருமபுரம் குரு ஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் சந்திரமௌலி கொற்கை அரசு மேல்நிலைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம் ஆகியோரும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %