0 0
Read Time:2 Minute, 13 Second

கடலூரில் பிரபல ரவுடியின் மனைவியின் 12 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் குப்பன்குளத்தில் வீரா, கிருஷ்ணா ஆகியோர் முக்கிய ரவுடிகளாக இருந்தனர். இவர்களுக்கிடையே அடிக்கடி தொழில் போட்டி காரணமாக மோதல்போக்கு இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த வருடம் கிருஷ்ணா தரப்பினர் வீராவை வெட்டிப் படுகொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் ரவுடி வீராவை கொலை செய்த ரவுடி கிருஷ்ணா போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்நிலையில் கிருஷ்ணாவின் மனைவியை 12 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் கடலூர் குப்பன்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அரவிந்தன் என்பவருக்கும் கிருஷ்ணாவின் மனைவியான காந்திமதிக்கும் திருமணத்தை மீறிய தவறான உறவு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அரவிந்தன் அவரது நண்பர்களை வைத்து அவரை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தக் கொலை தொடர்பாக விசாரணை செய்ய இரண்டு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை இந்த கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Source: Nakkeran

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %