0 0
Read Time:2 Minute, 22 Second

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் 15-ஆவது வார்டு மற்றும் செம்பனார்கோவில் 30-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காட்டுச்சேரி 30 -வது வார்டு ஒன்றியக்குழு வேட்பாளராக செல்வம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தத்தங்குடி 15-வது வார்டு ஒன்றியக்குழு வேட்பாளராக ரமேஷ் ராக்கெட் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதில் நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன்,
பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், முருகப்பா, அப்துல்மாலிக், அன்பழகன், குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் டாக்டர் ராம.சேயோன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், செம்பை ஒன்றிய துணைத் தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும்
காட்டுச்சேரி, திருக்களாச்சேரி, சந்திரபாடி, தத்தங்குடி, கழனிவாசல், பொரும்பூர் உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், திமுக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %