0 0
Read Time:1 Minute, 38 Second

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஊழியர்களிடயே ஏற்பட்ட மோதலில், ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு கட்டுகட்டும் பிரிவில் தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறர். சவக்கிடங்கில் பணியாற்றி வரும் நாகை ஏனங்குடியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், தனக்கு பணியில்லாத நேரத்தில் கட்டுகட்டும் பிரிவிற்கு வருவதால், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று ஏற்பட்ட தகராறில் ஏனங்குடி ரமேஷை, கரந்தை ரமேஷ் தாக்கியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ஏனங்குடி ரமேஷ், தனது மகன்கள் இருவரையும் மருத்துவமனைக்கு வரவழைத்து கரந்தை ரமேஷை பலமாகத் தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த கரந்தை ரமேஷ், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஏனங்குடி ரமேஷையும், அவரது மகன்களையும் கைது செய்துள்ளனர்.

source:puthiyathalaimurai

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %