0 0
Read Time:2 Minute, 11 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நகரில் இளம் காங்கிரஸ் தலைவி பிரியங்கா காந்தி கைது செய்ததை கண்டித்தும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி குத்தால நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் ராஜ்குமார் எம்எல்ஏ வழிகாட்டுதல் படி
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.பி.டி சூரியா தலைமை வகித்தார். இதில் நகர செயலாளர் பூர்விகா செந்தில் மாவட்ட நிர்வாகி ஜம்பு கென்னடி மகாலிங்கம் துரை கலியபெருமாள் அஜிஸ் ஹபீப் முஹம்மது தர்மராஜ் நாடார் மாவட்ட பொறுப்பாளர்கள் ரியாத் அஹ்மது கோடி மங்கலம் செந்தில் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஹலிக்குல் ஜமால் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரநாத் நகர பொறுப்பாளர் சாய்ராம் கீர்த்தி மற்றும் கட்சினர் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் உடனடியாக பிரியங்கா காந்தி விடுதலை செய்யக்கோரியும் உத்தரபிரதேச அரசை பதவி நீக்கம் செய்யக் கோரியும் மோடி அரசு விவசாயிகள் மீது தவறான போக்கினைக் கண்டித்தும் விவசாய சட்டத்தை உடனடியாக வாபஸ் வாங்க கோரியும் கண்டன குரல்கள் எழுப்பப்பட்டன குத்தால நகர பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரும் ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிருபர்: ஜமால்,மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %