0 0
Read Time:1 Minute, 3 Second

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன், இவர் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கியிருந்தார் கீதாஞ்சலி.

செல்வராகவன் – கீதாஞ்சலி தம்பதிக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கீதாஞ்சலி செல்வராகவன் நேற்று தனது 35 வது பிறந்தநாளை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடியுள்ளார்.

அந்த பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் தனுஷ், செல்வராகவன், நடிகை வித்யூலேகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %