எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.!
மழலையர் ,அங்கன்வாடியில் பணியாற்றுவோர் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
தமிழகத்தில் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நவம்பர் 1ம் தேதி முதல் திருமண விழாக்களில் 100 பேர் பங்கேற்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
திருவிழாக்கள், அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அரசு அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி .