0 0
Read Time:1 Minute, 56 Second

3 வேளாண் திட்டங்களை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் 10 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் மத்திய அரசிற்கு எதிராக மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி நகரின் முக்கிய பகுதியில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் மோடியின் உருவ பொம்மையை எறிக்க முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்ததால் போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவான நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இந்த போராட்டத்தினால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %