0 0
Read Time:1 Minute, 34 Second

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார் . இதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் அருகில் உள்ள இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காரைக்கால் கோட்டுச்சேரி சேர்ந்த முகமது பைசல் என்கின்ற வாசிம் அக்ரம்(23) என்பவன் கடந்த சில நாட்களாக சிறுமியை ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்தது தெரிய வந்தது. மேலும் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த வாசிம் அக்ரமை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவனிடம் இருந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக போலீசார் ஒப்படைத்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %