0 0
Read Time:1 Minute, 52 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஹெச்.எம்.சி இறகுப்பந்தாட்ட மைதானத்தில் வருகின்ற தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு இற்குபந்தாட்ட போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ரோட்டரி சங்க செயலாளர் கி.ராஜீ, ஆசிரியர் புனிதன், திமுக பிரமுகர் முனைவர் ஏகே சந்துரு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். ரோட்டரி சங்க செயலாளர் ராஜு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மாணிக்க.அருண்குமார் வரவேற்புரையாற்றினார், முதல்பரிசு கார்த்தி கைப்பான், இரண்டாம் பரிசு ஜமால் ரியாசுதீன், மூன்றாம் பரிசு சுலைமான் சபீக், நான்காம் பரிசு விஜயகுமார் ஸ்ரீகாந்த், ஐந்தாம் பரிசு அமீர் அருண், ஆறாம் பரிசு கர்ணா ஷெரீப் ஆகியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் ஹெச் எம் சி இறகுபந்தாட்ட விளையாட்டுவீரர்கள் செல்வகுமார், விஜயகுமார், ஸ்ரீகாந்த், சுலைமான், அமீர், கர்ணா, கலையரசன் கார்த்தி, புரட்சிதாசன்,
ஆனந்த் கோபி,அரபத் பாலமுருகன், மணிகண்டன், கார்த்தி, பாரதிராஜா, விஷால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பூமிநாதன் நன்றியுரை கூறினார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %