0 0
Read Time:1 Minute, 56 Second

தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் நெகிழி குப்பைகளை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, அவரது தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது ஆட்சியா் கூறியதாவது: 75-ஆவது சுதந்திரதின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை தமிழகம் கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தன்னாா்வலா்கள் மூலம் நெகிழிக் கழிவு மேலாண்மை பணியில் மக்களை ஈடுபடுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தூய்மைப் பணியில் நேரு இளையோா் மையம், நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா். நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, வட்டாட்சியா் அ.பலராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோக்பாபு, சக்தி, நேரு இளையோா் மைய மாவட்ட அலுவலா் ரிஜிஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %