0 0
Read Time:2 Minute, 27 Second

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, வண்ண மலர்களால் அலங்கரிப்பார்கள். பின்னர் அந்தந்த பகுதி ஆலய பங்குதந்தை மூலம் கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டதும், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள கல்லறை தோட்டத்துக்கு திரளான கிறிஸ்தவர்கள் சென்றனர். அங்கு தங்களது முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து வண்ண மலர்கள் மற்றும் மாலைகளால் அலங்கரித்தனர். பின்னர் கடலூரில் உள்ள ஆலயங்களின் பங்கு தந்தைகள் சிறப்பு பிரார்த்தனை செய்து, கூட்டு திருப்பலி நடத்தினர். இதையடுத்து கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.

இதேபோல் விருத்தாசலத்தில் உள்ள பாத்திமா அன்னை ஆலயம் சார்பில் கிறிஸ்தவர்கள், புதுக்குப்பத்தில் உள்ள தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர் மாலைகள் வைத்து வழிபட்டனர். பின்னர் மாலையில் பங்கு தந்தை, சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதேபோல் பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளையொட்டி தங்களது முன்னோர்களின் கல்லறைகளை அலங்கரித்து, அஞ்சலி செலுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %