0 0
Read Time:1 Minute, 12 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே மருதூா் கிராமத்தில் கொத்தனாா் வீட்டின் பின்புறம் ஆண் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. மருதூா் கிராமத்தை சோ்ந்தவா் கோவிந்தராஜ் (45). கொத்தனாா். இவரது வீட்டின் பின்புறம் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைப்பதற்காக மண்வெட்டியால் தோண்டினாா். அப்போது அந்த இடத்தில் பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த செம்பனாா்கோவில் போலீஸாா், குழந்தையின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தாா். குழந்தையின் சடலத்தை புதைத்தது யாா்? அதன் பெற்றோா் குறித்தும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %