1 0
Read Time:1 Minute, 53 Second

மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் கோயில் பாதுகாவலரை கொலை செய்த மர்மநபர் குறித்து தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என மயிலாடுதுறை போலீஸார் அறிவித்துள்ளனர். 

மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் கோயிலில் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, கோயிலில் இரவுப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர் எஸ்.சாமிநாதன்(55) மர்ம நபரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாமிநாதன் மே 14-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இக்கொலை நடந்து 6 மாதங்கள் ஆகியும் குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளரை 8778347770 என்ற எண்ணிலும், மயிலாடுதுறை காவல் ஆய்வாளரை 9442003309 என்ற எண்ணிலும், காவல் உதவி ஆய்வாளரை 9498164710 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க மயிலாடுதுறை போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %