0 0
Read Time:2 Minute, 20 Second

புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனையை உடனடியாக திறந்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகர் புறங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய மாற்று திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தைல மரக் காடுகளை அகற்ற வேண்டும், அரசு பொறியியல் கல்லூரி திறந்திட வேண்டும், என பல்வேறு மக்கள் நல கோரிக்கைகளை வழியுறுத்தி மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் வரவேற்பு குழு தலைவர் தோழர் பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.நகர செயலாளர், தோழர் அடைக்கலசாமி தலைமை வகித்தார், மாநில குழு உறுப்பினர் எழுத்தாளர் தோழர்.ஐ.வி.நாகராஜன் மாநாடு துவக்கவுரை ஆற்றினார், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், மாநில குழு உறுப்பினருமான தோழர் மா.சின்னதுரை அவர்கள் மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார் மற்றும் மாவட்ட செயலாளர் தோழர் கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரிமளம் தோழர்.நாகராஜன், தோழர் பொன்னி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜியாவுதீன், அசோகன், துரை நாராயணன், ஜனார்த்தனன், மற்றும் நகர குழு உறுப்பினர்கள் சண்முக பழனியப்பன்,முத்தையா,கனேஷ், பிச்சைமுத்து, காயத்திரி, முருகையா, யாசிந், பழ முருகேசன், சித்ரா, பாபு ராஜேந்திரன், மற்றும் கிளை செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் நிறைவாக ஏகமனதாக தோழர் சோலையப்பன் அவர்கள் புதுக்கோட்டை நகர செயலாளராக தேர்வு செய்யப்பட்டார், மற்றும் பொதுக்கூட்டத்தில் காந்தி நகர் தோழர் ஜெகன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %