0 0
Read Time:2 Minute, 30 Second

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துகின்ற சிறப்பு மருத்துவ முகாம் 14.11.2021 அன்று நடைப்பெற்றது. சிதம்பரம் சட்டமன்ற தொகுதி சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துகின்ற சிறப்பு முகாம் சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி மற்றும் வடக்கு வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் நடைப்பெற்றது. சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்துகின்ற மருத்துவ முகாமினை கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.அருள், மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் நகர கழக செயலாளர் தோப்பு கே.சுந்தர், பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அசோகன், முன்னாள் ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட மாணவரனி பொருளாளர் சங்கர், நகர கழக துணை செயலாளர் கே.ஆர்.ஜி.சாமிநாதன், பொதுக் குழு உறுப்பினர் சிவ,சிங்காரவேல், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் இளங்கோவன், நகர இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா, வார்டு செயலாளர் வீரமணி, தன.ராஜேந்திரன், எம்.ஜி.மணி, நகர ஐ.டி.விங் செயலாளர் மணிராஜ், வழக்கறிஞர் வேணு,புவனேஸ்வரன், நிர்வாகிகள் வெங்கடேசன், வள்ளி, ராஜேஷ், வீரசேனன், வட்டார மருத்துவ அலுவலர் மங்கை, மருத்துவ அலுவலர் தீபன் விஸ்வநாதன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிசாமி, மருத்துவர்கள் அமல், பவித்தரா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %