0 0
Read Time:1 Minute, 52 Second

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் நம்பர் புதுத் தெருவில் அமைந்துள்ளது. இந்த சாலை சமீபத்தில் பெய்த மழை காரணமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் பாதாள சாக்கடை நீர் சாலைகளில் வழிந்தோடி வருகிறது. இதன் காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அடிக்கடி வாகனங்களில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.

அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது மனைவி 9 மாத கர்ப்பிணியான தீபா என்பவருடன் சாலையில் தடுமாறி விழுந்து உள்ளார். இந்த சாலையை செப்பனிட கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது கர்ப்பிணி மனைவியுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

வீதியில் செல்வோர் மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கடைகளில் பொதுமக்களிடம் கையில் பதாகையுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டார். பிச்சை எடுத்து நிதி தருகிறோம் சாலையை செப்பனிட்டு தாருங்கள் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %