0 0
Read Time:1 Minute, 42 Second

திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் இன்று அதிகாலை 4 மணிக்கு கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் நேற்று இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ஆடுகளுடன இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

இதனால் அவர்கள் ஆடு திருட்டு கும்பல் என்பதை அறிந்த பூமிநாதன் அவர்களை துரத்தி சென்ற போது இருவர் பூமிநாதனை படுகொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நெடுஞ்சாலைகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை 4 தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் எஸ்எஸ்ஐ கொல்லப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் 10 வயது, 17 வயது சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %